Date:

ரணில் என்பவர் ராஜபக்சகளின் நகல் – பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரிக்க வேண்டிய இடத்தில் உள்ளார் என அமெரிக்க பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பயன்பாட்டு பொருளாதார பேராசிரியரான உலகப் புகழ்பெற்ற பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கே தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

அவரது பதிவில் தொடர்ந்தும் தெரிவித்திருப்பதாவது,

1977ஆம் ஆண்டு முதல் ரணில் விக்ரமசிங்க ஆறு முறை இலங்கையின் பிரதமராக பதவி வகித்து ஊழல்கள் நிறைந்த ராஜபக்சகளை காப்பாற்றியதாகவும் சுட்டிக்காட்டியள்ளார்.

ரணில் என்பவர் ராஜபக்சகளின் நகல் என்பதனை தவிர வேறு ஒன்றுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் சொத்துக்களை கணக்காய்வு செய்ய வேண்டிய தருணம் இது எனவும் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே சுட்டிக்காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மரக்கறிகளின் விலை உயர்வு

புத்தாண்டு காலத்தில் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு மரக்கறிகளின் விநியோகம் இல்லாததால்,...

தூர இடங்களுக்கு பயணிப்போருக்கான அறிவிப்பு

பண்டிகை காலத்தில் வௌியூர் மற்றும் தூர இடங்களுக்கு பயணிப்போர் மிகுந்த அவதானத்துடன்...

சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் ...

பிள்ளையானை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை 90 நாட்கள் தடுத்து வைத்து...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373