Date:

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமையை மீறும் வகையில் சமூக வலைத்தளங்களில் தகவல் பகிர்வோர் தொடர்பில் விசாரணை

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமைகள் மீறப்படும் வகையில் சமூக வலைத்தளங்களில் தகவல்களை பகிர்வோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம், கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கணினி பிரிவினால் இந்த விடயம் மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இரகசிய அறிக்கை ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ள ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பின் போது, ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடாது என பாராளுமன்ற உறுப்பினர்களை பயமுறுத்தி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான சிறப்புரிமை மீறப்படும் வகையில், பொதுமக்களின் எண்ணங்களை மாற்றும் நோக்குடன் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பகிரப்படுவதாக குறித்த அறிக்கையூடாக நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

விடயங்களை ஆராய்ந்த நீதவான் நீதிமன்றம், விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரேமதாசவிற்கு மெய் பாதுகாவலராக இருந்த முபாறக் ஓய்வு

இலங்கை பொலிஸ் துறையில் 36 ஆண்டுகளுக்கும் மேலாக நேர்மையும் நம்பிக்கையும் கொண்ட...

உயர்தர மாணவர்களுக்கான இலங்கை பைத்துல்மால் நிதிய புலமைப்பரிசில் விண்ணப்பம் – 2025

⭕ *BAITHULMAL SCHOLARSHIP* > Closing Date Extended உயர்தர மாணவர்களுக்கான இலங்கை பைத்துல்மால்...

வரி குறித்து கலந்துரையாட அமெரிக்கா செல்லும் இலங்கை பிரதிநிதிகள் குழு

அமெரிக்காவின் தீர்வை வரி குறித்து கலந்துரையாட இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும்...

செவிலியர் சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கு

செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான...