Date:

5 வயது சிறுமியை சித்திரவதைக்குட்படுத்திய தந்தை கைது

கொழும்பு – மட்டக்குளியவில் 5 வயதான சிறுமியை சித்திரவதைக்குட்படுத்திய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மித்தெனிய சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தால் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, 28 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

அந்நபருடன் ஏற்பட்ட முறுகல் காரணமாக 05 மாதங்களுக்கு முன்னர் சிறுமியின் தாய் வௌிநாட்டிற்கு சென்றுள்ளார்.

அதன் பின்னர், சிறுமியை தனது வீட்டிற்கு அழைத்துச்சென்றவர், சிறுமியை சித்திரவதை செய்து, அதனை ஔிப்பதிவு செய்து தாய்க்கு அனுப்பியுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

சிறுமியின் தந்தையை புதுக்கடை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...