Date:

பாடசாலை மதிய உணவு திட்டம் குறித்து கல்வி அமைச்சின் தீர்மானம்

பாடசாலைகளில் மதிய உணவு திட்டத்தினை முன்கொண்டு செல்வதற்கு  சீனா 10 ஆயிரம்  மெட்ரிக் டொன் அரிசியினை நன்கொடையாக வழங்கியுள்ளது.

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வறுமை மற்றும் போஷாக்கு குறைபாடு ஆகியவற்றினை கருத்திற் கொண்டு பாடசாலை உணவுத் திட்டத்திற்கு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் அறிவித்துள்ளது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்ட பெரும்பாலான பாடசாலைகள் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களை உள்ளடக்கிய பாடசாலைகள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், ஒரு வேளை உணவுக்காக ஒதுக்கப்பட்ட 30 ரூபா தொகையானது தற்போது 60 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, பாடசாலை உணவுத் திட்டத்தினை உரிய முறையில் நடைமுறைப்படுத்துவதற்கு கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போஷாக்கு பிரிவு நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் எதிர்காலத்தில் நாட்டுக்கு நன்கொடையாக பெறப்படும் அரிசித் தொகையும் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் எனவும்  கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

டான் பிரியசாத் உயிரிழப்பு என வெளியான செய்தியில் திருத்தம்

துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான டான் பிரியசாத் உயிரிழப்பு என வௌியாகும் செய்தியில் சிக்கல்....

Update டேன் பிரியசாத் உயிரிழப்பு

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான டேன் பிரியசாத் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...

Breaking News டேன் பிரியசாத் மீது துப்பாக்கிச் சூடு

சற்றுமுன்னர் டேன் பிரியசாத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.       துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன்...

கட்டான பகுதியில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

கட்டான பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர்...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373