இரண்டு நபர்களை பாதுகாப்பதற்குப் பதிலாக நாட்டின் இரண்டு கோடி மக்களை பாதுகாப்பதற்கு பாதுகாப்புப் படையினர் அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டுமென தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அனைவரும் ஜனநாயகத்துக்க மதிப்பளித்து செயற்படுவது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் ஜனநாயகத்தை விரும்பும் அனைத்து மக்களாலும் மேற்கொள்ளப்பட்டு வரும் அமைதிப் போராட்டத்துக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய சந்தர்ப்பத்தில் பொறுப்புடன் செயற்படுமாறு தாம் அனைத்து பாதுகாப்புப் பிரிவினரையும் கேட்டுக்கொள்கிறோம். ஜனநாயகத்தை சீரழித்து மக்களை கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ள அவர்,ஒன்றுக்கொன்று முரண்பாடான தகவல்களை அரசு வெளியிட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இத்தருணத்தில் அமைதியாக ஜனநாயகத்துக்கு மதிப்பளித்து செயற்படுமாறு தாம் நாட்டு மக்களை கேட்டுக்கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.