அனைத்துக் கட்சித் தலைவர்களும் ஜூலை 9ஆம் திகதி செய்துகொண்ட உடன்படிக்கையை பின்பற்ற வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
“உடனடியாக ஒரு புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுக்கவும், பின்னர் புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்கவும். அதிக நேரம் எடுக்கும் போது நடந்து கொண்டிருக்கும் அமைதியின்மை இன்னும் மோசமாகும். அப்படியானால் இலங்கை சட்டமற்ற நாடாக மாறுவதை யாராலும் தடுக்க முடியாது எனவும் மேலும் தெரிவித்தார்.