அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு சபாநாயகர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி இன்று மாலை கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை முன்வைத்துள்ள நிலையில் அவசர கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.