Date:

எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரும் எரிபொருள் கப்பல்கள் பற்றிய அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரவிருக்கும் எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று(11) விளக்கமளித்துள்ளார்.

இதன்படி, டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களுக்கான முழுப் பணம் கடந்த வெள்ளிக்கிழமை லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் செலுத்தப்பட்டதாகவும், டீசல் கப்பல் இம்மாதம் 15 மற்றும் 17 ஆம் திகதிகளுக்கு இடையில் இலங்கைக்கு வர உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 22-24 ஆம் திகதிகளில் பெற்றோல் கப்பல் வரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் முன்பணம் செலுத்தப்பட்ட டீசல் கப்பல் இம்மாதம் 15-17 ஆம் திகதிகளில் வரும் எனவும், அதற்கான எஞ்சிய பணம் இன்று செலுத்தப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்பணம் செலுத்தப்பட்ட பெற்றோல் கப்பல் இம்மாதம் 17-19 ஆம் திகதிகளில் வந்து சேரும் எனவும், அதற்கான மீதிப் பணம் நாளை செலுத்தப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மற்றுமொரு டீசல் கப்பலானது 15-17 ஆம் திகதியும், மசகு எண்ணெய் ஏற்றிய இரண்டு கப்பல்கள் 14-16 மற்றும் 15-17 ஆம் திகதிகளிலும் இலங்கைக்கு வரவுள்ளன.

இம்மாதம் 9ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த எரிபொருள் கப்பலில், நிலவும் மோசமான காலநிலை காரணமாக எரிபொருளை ஏற்ற முடியாமல் போனதால் இன்று இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...