Date:

எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரும் எரிபொருள் கப்பல்கள் பற்றிய அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் இலங்கைக்கு வரவிருக்கும் எரிபொருள் கப்பல்கள் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இன்று(11) விளக்கமளித்துள்ளார்.

இதன்படி, டீசல் மற்றும் பெற்றோல் கப்பல்களுக்கான முழுப் பணம் கடந்த வெள்ளிக்கிழமை லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் செலுத்தப்பட்டதாகவும், டீசல் கப்பல் இம்மாதம் 15 மற்றும் 17 ஆம் திகதிகளுக்கு இடையில் இலங்கைக்கு வர உள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

இம்மாதம் 22-24 ஆம் திகதிகளில் பெற்றோல் கப்பல் வரவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த வாரம் முன்பணம் செலுத்தப்பட்ட டீசல் கப்பல் இம்மாதம் 15-17 ஆம் திகதிகளில் வரும் எனவும், அதற்கான எஞ்சிய பணம் இன்று செலுத்தப்படும் எனவும் அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், முன்பணம் செலுத்தப்பட்ட பெற்றோல் கப்பல் இம்மாதம் 17-19 ஆம் திகதிகளில் வந்து சேரும் எனவும், அதற்கான மீதிப் பணம் நாளை செலுத்தப்படும் எனவும் எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மற்றுமொரு டீசல் கப்பலானது 15-17 ஆம் திகதியும், மசகு எண்ணெய் ஏற்றிய இரண்டு கப்பல்கள் 14-16 மற்றும் 15-17 ஆம் திகதிகளிலும் இலங்கைக்கு வரவுள்ளன.

இம்மாதம் 9ஆம் திகதி இலங்கைக்கு வரவிருந்த எரிபொருள் கப்பலில், நிலவும் மோசமான காலநிலை காரணமாக எரிபொருளை ஏற்ற முடியாமல் போனதால் இன்று இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வரவுள்ளதாக எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கெஹெலிய காலத்து மருந்து கொள்வனவுகள் தொடர்பில் தடவியல் கணக்காய்வு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில்,...

Breaking மின் கட்டண அதிகரிப்பு

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இலங்கை...

ரஷ்யாவில் இரகசியச் சிகிச்சை? ஈரானின் புதிய தலைவர் கடிதம்!

யுத்த மோதல்களுக்கு மத்தியில் மறைந்திருக்கும் ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா...

ஈரானின் கார்க் தீவை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது – ட்ரம்ப்

ஈரானின் எண்ணெயைக் கைப்பற்ற முடியும் என்றும், அந்நாட்டின் பிரதான எரிபொருள் மையமான...