Date:

நேற்று(7) இரவு இடம்பெற்ற எரிபொருள் நிலைய மோதலில் ஒருவர் பலி

காலி – மாகல்ல எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த இரு குழுக்களுக்கிடையே நேற்று(7) இரவு இடம்பெற்ற மோதலில் ஒருவர் பலியாகியதுடன் 3 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக தமது  காரில் பிரவேசித்த யடதுவ பிரதேசத்தைச் சேர்ந்த   நபரொருவர், தமது நண்பரின் வர்த்தக நிலையத்திற்கு முன்பாக இருந்த சிறிய இடைவெளியினூடாக எரிபொருள் வரிசைக்கு நடுவே குறிந்த காரை நுழைக்க  முயன்றுள்ளார்.

அதன்போது, வரிசையில் காத்திருந்தவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து இரு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஹபராதுவ – யடகல பகுதியைச் சேர்ந்த 25 வயதான ஒருவரே பலியானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ஜனாதிபதியின் தைப் பொங்கல் வாழ்த்துச் செய்தி

உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்களால் மிகுந்த பக்தியுடனும் உற்சாகத்துடனும் இன்று (15)...

இன்று முதல் வானிலையில் மாற்றம்

நாட்டில் காணப்படும் மழையுடனான வானிலை இன்று முதல் (15) குறைவடையும் என...

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதி தீர்மானம்!

2026 ஆம் ஆண்டின் முதலாம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்காமல் இருப்பதற்கு...

பால் மாவின் விலை குறைப்பு!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக...