நாளை (08) மற்றும் நாளை மறுதினம் (09) கொழும்பு-கோட்டை மற்றும் புறக்கோட்டை பகுதிகளில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், குறித்த ஆர்ப்பாட்டத்தை இடைநிறுத்துவதற்காக உத்தரவொன்றை பிறப்பிக்க கோரி பொலிஸார் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
மேலும், குறித்த திகதிகளில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகாமையில் ஆர்ப்பாட்டக்காரர்கள் செல்வதைத் தடுக்கும் வகையில் தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.