Date:

மூன்று இலட்சம் பெறுமதியான வலி நிவாரணி மாத்திரைகளை வைத்திருந்த இளைஞர் கைது

வலி நிவாரணி மருந்தாக வைத்தியர்களால் பரிந்துரைக்கப்படும் ஒரு வகை மருந்தை போதைப்பொருளாக பயன்படுத்துவதற்காக வைத்திருந்த நபரொருவர்  கம்பஹா மல்வத்துஹிரிபிட்டியவில் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புட்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக மருந்துகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரிடம் இருந்து Pregazime 150mg வகையிலான 530 வலி நிவாரண மாத்திரைகள், Pregabalin 150mg வகையிலான 190 வலி நிவாரண மாத்திரைகள் மற்றும் Novapreg 150mg வகையிலான 880 வலி நிவாரண மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட மருந்துகளின் மொத்த பெறுமதி மூன்று லட்சம் ரூபாய்களுக்கும் மேல் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கடத்தப்பட்ட பாடசாலை சிறுவன், வெள்ளை வேனில் இருந்து குதித்து தப்பி வந்தான்

கஹதுடுவ பகுதியில் வைத்து வெள்ளை வேனில் கடத்தப்பட்ட  15 வயதுடைய சிறுவன்...

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்

இலங்கையின் ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரை வரிகள் இல்லாமல்...

புதிய கல்விச் சீர்திருத்தம் – வரலாறு, அழகியல், தொழில்சார் பாடங்கள்..

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரினி...

City of Dreams Sri Lanka ஆரம்ப விழா சிறப்பு விருந்தினர் பங்கேற்பில் திடீர் மாற்றம்

தெற்காசியாவின் முதலாவது ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான City of Dreams Sri...