Date:

மீண்டும் குண்டு தாக்குதல் திட்டமா?

தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் வடக்கு, கிழக்கு அல்லது தென் பகுதிகளில், வெளிநாட்டு உளவுச்சேவைகளின் பங்களிப்புடன் தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்று வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார சபையில் இன்று கேள்வி எழுப்பினார்.

எனினும், இந்த தாக்குதல்களை தமிழீழ விடுதலைப்புலிகள் மேற்கொண்டதாக கூறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாகவும் பாதுகாப்பு செயலாளர் கமால் குணரத்னவினால் உறுதிப்படுத்தப்பட்ட கடிதம் ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வடக்கு – கிழக்கில் பணியாற்றும் வெளிநாடுகளின் அலுவலர்கள் குறித்த தினங்களில் பொது நிகழ்வுகளில் பங்கேற்கவேண்டாம் என்று அந்தக் கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எதிர்வரும் காலங்களில் பிரதேச அரசியல்வாதிகளின் வீடுகள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்படலாம் என்ற அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டினார்.

குறித்த தகவலில் உண்மையிருக்கிறதா என்று பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, சபையில் கேள்வி எழுப்பினார். எனினும் இதனை பாதுகாப்பு தரப்பு உரிய நடவடிக்கையை எடுக்கும் என்று பிரதி சபாநாயகர் பதில் வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

ரணில் CIDயில் ஆஜராகின்றார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்வரும் புதன்கிழமை (11)அன்று குற்றப் புலனாய்வுத்...

முகக் கவசங்களை அணியுங்கள்;பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சுவாச நோய்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருவது குறித்து அரசு வைத்திய...

ஜெனரல் துஷார இடைநிறுத்தம்

சிறைச்சாலை ஆணையாளர் ஜெனரல் துஷார உபுல்தெனியவின் சேவைகளை உடனடியாக இடைநிறுத்த அரசாங்கம்...

சிறைச்சாலைகள் ஆணையாளர்கு கட்டாய விடுமுறை!

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவை கட்டாய விடுமுறையில் அனுப்ப அமைச்சரவை...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373