Date:

நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் சேவைகள் ஸ்தம்பிதம்

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் இன்று முதல் தனியார் பஸ் சேவைகள் முற்றாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பஸ்களுக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவே குறித்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாகவும்,அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை அதிகபட்ச கொள்ளளவுடன் சேவையினை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கான போதியளவு எரிபொருள் கையிருப்பில் காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் ரயில் ஊழியர்கள் தமது தனியார் வாகனங்களில் கடமைக்கு சமூகமளிப்பதறகு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ரயில்சேவைகளில் தடைஏற்படலாம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...