Date:

நாடளாவிய ரீதியில் தனியார் பஸ் சேவைகள் ஸ்தம்பிதம்

எரிபொருள் பற்றாக்குறை காரணமாக நாடளாவிய ரீதியில் இன்று முதல் தனியார் பஸ் சேவைகள் முற்றாக நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பஸ்களுக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவே குறித்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எரிபொருள் விநியோகிக்கப்பட மாட்டாது என பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளதாகவும்,அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களை அதிகபட்ச கொள்ளளவுடன் சேவையினை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இதனிடையே, ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கான போதியளவு எரிபொருள் கையிருப்பில் காணப்படுவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனினும் ரயில் ஊழியர்கள் தமது தனியார் வாகனங்களில் கடமைக்கு சமூகமளிப்பதறகு எரிபொருள் பற்றாக்குறை காரணமாக ரயில்சேவைகளில் தடைஏற்படலாம் என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அறுகம்பைக்கு இஸ்ரேலியர்களால் கடும் பாதிப்பு

சுற்றுலா விசாவில் வந்த இஸ்ரேலியர்கள், அறுகம்பை பகுதியில் சுற்றுலா தொழிற்துறையை கடுமையாகப்...

புதிய கல்விச் சீர்திருத்தம் கூட்டாக நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்பு

புதிய கல்வி சீர்திருத்தம் கல்வி அமைச்சின் அல்லது ஜனாதிபதி அனுரவின் அல்லது...

வைத்திய இடமாற்றங்கள் இல்லாததால் பல சிக்கல்கள்

நாட்டில் 23,000 க்கும் மேற்பட்ட வைத்தியர்களின் இடமாற்றங்களில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அரச...

2025 ஜூலை இல் 200,244 சுற்றுலாப் பயணிகள் வருகை

ஜூலை மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 200,000...