Date:

வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு நிறுத்தம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கை வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு எரிபொருள் வழங்கும் செயற்பாடு நிறுத்தப்பட்டுள்ளது.

விமானங்களுக்கான எரிபொருள் நிறைவடைந்துள்ளமையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவண்சந்ர குறிப்பிட்டார்.

இதன் காரணமாக முழுமையான எரிபொருளுடன் இலங்கைக்கு வரும் வெளிநாட்டு விமானங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அவசர தேவைக்காக மிகவும் குறைந்த அளவான விமான எரிபொருள் கையிருப்பில் உள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டார்.

விமானங்களுக்கான எரிபொருள் தட்டுப்பாடு தொடர்பில் நேற்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இலங்கை கனியவள கூட்டுத்தாபனம், துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சு, ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் என்பவற்றின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றிருந்தனர்.

எதிர்வரும் 15ஆம் திகதிக்கு முன்னர் தேவையான விமான எரிபொருளை பெற்று தருவதற்கு கனியவள கூட்டுதாபனம் இதன்போது இணங்கியதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் கே.டீ.எஸ்.ருவண்சந்ர தெரிவித்தார்.

எனினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கைக்கான விமான சேவைகளை குறைப்பதற்கு சில விமான நிறுவனங்கள் நடவடிக்கை எடுத்துள்ளதாக விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் குறிப்பிடுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க அங்கிகாரம்

புதிய எல்லை நிர்ணயக் குழுவை நியமிக்க ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில்...

குரங்கினால் மின்சார தடை? PUCSL இன் பகிரங்க விசாரணை ஆரம்பம்

இலங்கை மின்சார சபையின் பாணந்துறை கிரிட் துணை மின்நிலையத்தின் மின்மாற்றி அமைப்பில்...

பாலஸ்தீனத்தை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் இலங்கையில் ஆரம்பம்

இரு அரசு தீர்வை செயல்படுத்துவது உட்பட, பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க உள்நாட்டிலும் சர்வதேச...

யானையிடம் இருந்து தப்பிய 3 வயது குழந்தை

மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் யானைத் தாக்குதலில் 35...