Date:

3 கோடி பெறுமதியான தங்கநகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் நால்வர் கைது

நோர்வூட் பிரதேசத்தில் நகைகளை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்கள் இன்று அட்டன் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

நோர்வுட் பிரதேச தங்க நகை அடகு பிடிக்கும் கடையொன்றில் 2021 டிசம்பர் மாதம் 9ம் திகதியன்று குறித்த கொள்ளை சம்பவம் இடம் பெற்றதை தொடர்ந்து நோர்வூட் பொலிஸாரிடம் முறைப்பாடு முன்வைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையிலே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து சுமார் 3 கோடி 15 இலட்சம் பெறுமதியான தங்கநகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த நபர்களிடம் இருந்து 54 தங்க சங்கிலிகள் ,757 தோடுகள் ,117 பெண்டன்கள் மற்றும் 18 வலையல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நகை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் நோர்வூட் பிரதேசத்தை சேர்ந்த ஆண்கள் மூவரும் பெண்ணொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்சார சபையின் பல தொழிற்சங்கங்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு

இன்று (09) பிற்பகல் 3.00 மணி முதல் 24 மணிநேர காலப்பகுதிக்கு...

ரியாத், டுபாய்க்கான தினசரி விமான சேவைகளை மீள ஆரம்பம்

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத்...

கடும் வெப்பம் ; சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, சிறுவர்களுக்கு தோல் தொடர்பான...

ஈரானின் இறையாண்மைக்கு மதிப்பளிக்க வேண்டும் – சீனா

ஈரானின் புதிய அதி உயர் தலைவராக மொஜ்தபா கமேனி நியமிக்கப்பட்டது தொடர்பில்...