கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கைதிகள் இன்று(29) அதிகாலை தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், துங்காவில பாலத்திற்கு அருகில் வீதி மருங்கைகள் இடப்பட்டுள்ளன.
அப்பகுதியில் ராணுவம் மற்றும் பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.