Date:

8 தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பணிப்புறக்கணிப்பில்

தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் பிரச்சினை காரணமாக பொது சுகாதார பரிசோதகர்கள், குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சுகாதாரத்துறையை சேர்ந்த 8 தொழிற்சங்கங்கள் இன்றும், நாளையும் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளன.

எரிபொருள் விநியோகம் முறையாக சுகாதார ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதன் காரணமாக இந்த நடவடிக்கைக்கு வந்ததாக அதன் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்தார்.

எனவே, இடைநிலை வைத்திய சேவை ஒன்றிணைந்த முன்னணி என்ற அடிப்படையில் 8 தொழிற்றுறையினரின் இணக்கப்பாட்டுடன், இன்றும், நாளையும் கடமைக்கு சமூகமளிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம், குடும்ப நல சேவை உத்தியோகத்தர், தொழிநுட்பவியலாளர்கள் சங்கம், ஈ.ஈ.ஜி அதிகாரிகள் சங்கம், பொது ஆய்வுக்கூட நிபுணர்கள் சங்கம், பல் சிகிச்சையாளர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் இந்த பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...