Date:

கொரோனா வைரஸின் புதிய திரிபு கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார்.

எனினும் நாட்டினுள் புதிய வைரஸ் எதுவும் கண்டறியப்படவில்லை என அவர் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் குறிப்பிட்டுள்ளார். ஆனால் BA 5 என்று பெயரிடப்பட்ட இந்த வைரஸை மிகுந்த அவதானத்துடன் பரிசோதித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

அத்துடன் இந்த புதிய வைரஸ் 63 நாடுகளில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் ஏனைய வைரஸ்களை விட வேகமாகப் பரவுகிறது என்றும், முந்தைய கொவிட் 19 வைரஸின் திரிபுகளை விட அதிகமாகப் பரவுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, தென்னாபிரிக்காவில் கொவிட் வைரஸின் புதிய வகையும் கண்டறியப்பட்டுள்ளது. இது B.1.1.529 எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவி நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்துவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர். உலக சுகாதார விஞ்ஞானிகள் இன்னும் வைரஸ் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் BA 5 வைரஸ் புதியதொரு திரபாக உருவெடுத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

“முஹம்மத்திடமிருந்து கற்க வேண்டும்”

நமது நாடு பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள இத்தருணத்தில், நாட்டிற்கு அபிவிருத்தியும் சேவைகளும்...

ஈரானுடன் கூட்டு சேர்ந்து இஸ்ரேலை தாக்கும் ஹவுதி படை

இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ஏமன் நாட்டின்...

ஈரான் தாக்குதலில் இலங்கைப் பெண்கள் இருவர் காயம்

இஸ்ரேல் முழுவதும் ஈரானிய ஏவுகணை தாக்குதல்கள் மேற்கொண்டு வரும் நிலையில் இதனால்...

Justin அமெரிக்காவுடன் இனிப் பேசி அர்த்தமில்லை -ஈரான்

இஸ்ரேலின் “அநாகரிகமான” தாக்குதல்கள் தொடரும் நிலையில், அமெரிக்காவுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளைத் தொடர்வது...

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/newsswqr/public_html/wp-includes/functions.php on line 5373