Date:

மின்தடை குறித்த அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் 3 மணித்தியால மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 27 ஆம் திகதி முதல் ஜுலை 3 ஆம் திகதி வரை இவ்வாறு மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும், பகல் வேளைகளில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், குறித்த வலயங்களில் இரவு வேளைகளில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், CC எனப்படும் வர்த்தக வலயங்களில் ஜுலை 2 மற்றும் 3 ஆம் திகதிகள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், M, N, O, X, Y மற்றும் Z ஆகிய வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...