Date:

மின்தடை குறித்த அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் 3 மணித்தியால மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய 27 ஆம் திகதி முதல் ஜுலை 3 ஆம் திகதி வரை இவ்வாறு மின் விநியோகத் தடையை அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும், பகல் வேளைகளில் 1 மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், குறித்த வலயங்களில் இரவு வேளைகளில் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், CC எனப்படும் வர்த்தக வலயங்களில் ஜுலை 2 மற்றும் 3 ஆம் திகதிகள் தவிர்ந்த ஏனைய நாட்களில் காலை 6 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதிக்குள் இரண்டு மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

மேலும், M, N, O, X, Y மற்றும் Z ஆகிய வலயங்களில் காலை 5 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதிக்குள் 3 மணித்தியால மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

இரண்டு பேருந்துகள் மோதி விபத்து : சாரதி பலி

மொனராகலை - வெலியாய பகுதியில் தனியார் பேருந்தொன்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு...

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T - 56...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை...

அனுர- மோடியால் பெரும் பதற்றம்

"அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...