Date:

நிபந்தனைகளுடன் இலங்கைக்கு IMF ஆதரவு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்காக நியமிக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (24) இடம்பெற்றது.

இன்று பிற்பகல் கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கொள்கைகளுக்கு இணங்க இக்கட்டான நேரத்தில் இலங்கைக்கு உதவ எதிர்பார்த்துள்ளதாக பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.

ஒரு வார காலம் இலங்கையில் தங்கியிருக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு, ஊழியர்கள் மட்ட உடன்படிக்கையை எட்டுவது தொடர்பான கொள்கை அடிப்படையிலான விடயங்கள் குறித்து நீண்ட ஆய்வை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்படி, பிரதமர், நிதியமைச்சு, மத்திய வங்கி உள்ளிட்ட பொருளாதார அதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியதுடன் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...

ஐக்கிய அரபு அமீரகத்தின் இராஜாங்க அமைச்சர் இலங்கை விஜயம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் இராஜாங்க அமைச்சர்...