Date:

மின்விநியோகத்தடை குறித்த அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு 2 மணித்தியாலத்துக்கும் அதிகமான காலப்பகுதியில் மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப்பயன்பாடுகள்
ஆணைக்குழுவினால் இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த தினங்களில் வர்த்தக வலயங்கள் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் காலை வேளைகளில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் இன்றைய தினம் 2 மணித்தியாலமும் 30 நிமிடங்களும் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களிலும், P முதல் W வரையான வலயங்களிலும் இவ்வாறு மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

குறித்த வலயங்களில் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 வரையான காலப்பகுதியில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், M, N, O, X, Y மற்றும் Z ஆகிய வலயங்களில் 3 மணித்தியாலங்களும், CC வலயங்களில் 2 மணித்தியாலமும் காலை வேளைகளில் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

யோஷிதவிற்கு எதிரான வழக்கு : நவம்பர் 12ஆம் திகதி விசாரணைக்கு உத்தரவு

யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக...

நியூயோர்க் நகரத்தின் முதல் முஸ்லிம் மேயர் தெரிவு

நியூயோர்க் நகரத்தின் வரலாற்றில், முதல் முஸ்லிம் மேயராக ஸோஹ்ரான் மாம்டானி தெரிவு...

பிலிப்பைன்சை தாக்கிய சூறாவளி; 60க்கு மேற்பட்டோர் பலி

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். இந்நாட்டை நேற்று கல்மேகி என்ற...

சரித்த ரத்வத்தே பிணையில் விடுதலை

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மூத்த ஆலோசகராக இருந்த காலத்தில், உரிய...