Date:

டயர் தட்டுப்பாடு காரணமாக 600 பஸ்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தம்

பஸ் டயர் தட்டுப்பாடு காரணமாக நாடுமுழுவதும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான சுமார் 600 பஸ்கள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளன.

விநியோக நிறுவனங்கள், குறித்த டயர்களுக்கு அதிக விலையினை கோரும் நிலையில், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு அசௌகரியம் ஏற்பட்டுள்ளமையினால் பேருந்துகள் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள இலங்கை போக்குவரத்து சபையின் பிரதிப் பொதுமுகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹங்ச, டயர்கள் கிடைப்பதில் தொடர்ந்தும் தாமதம் நிலவுவதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தனியார் பஸ்களுக்கு, அரச பஸ் சாலை எரிபொருள் நிரப்பு நிலையம் ஊடாக எரிபொருளை தொடர்ந்தும் வழங்குவதற்கு இலங்கை போக்குவரத்து சபை தீர்மானித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை

மேல் , வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி...

ஈரானின் அதிரடி அறிவிப்பு

இஸ்ரேல் தனது தாக்குதல்களை நிறுத்தும் வரை, தனது அணுசக்தி திட்டம் தொடர்பான...

இம்மாதம் இலங்கை வரும் மனித உரிமைகள் ஆணையாளர்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க், இம்மாதம்...

எம்.பி பதவியை இராஜினாமா செய்த பிரதியமைச்சர் ஹர்ஷண

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷண சூரியப்பெரும தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை...