இலங்கைக்கு மேலும் அவசர உதவி தொகை ஒன்றை வழங்கவிருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இலங்கைக்கு 5.75 மில்லியன் டொலர்களை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தொடர் உதவிகளின் ஒரு கட்டமாக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
கடந்த வாரம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
இதற்கு மேலதிகமாக இந்த உதவி தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.