Date:

பாடப்புத்தகங்களுக்கான கடதாசிகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை

எதிர்வரும் கல்வியாண்டுக்கான பாடசாலைகளில் அடிப்படைத் தேவைகளை எவ்வித தட்டுப்பாடும் இன்றி பூர்த்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

பாடசாலைகளின் பாடப் புத்தகங்களை அச்சிடுவதற்குத் தேவையான கடதாசிகள் இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இறக்குமதி செய்யப்படும் என்று அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

அடுத்தாண்டு பாடசாலை சீருடைகளுக்கு தேவையான பொருட்களை வழங்குவது குறித்து உள்நாட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் சீன அரசுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

2022 க.பொ.த உயர்தரப் பரீட்சை ஒக்டோபரிலும் 2022 தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை நவம்பர் மாதத்திலும் நடத்துவதற்கு கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிலந்தவின் பணிநீக்கம் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான ஒழுக்காற்று...

இஸ்ரேல் சபாத் இல்லத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத்...

கடந்த ஆறு மாதத்தில் அரச வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம்

2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின்...

மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோருக்குப் பிணை

சர்ச்சைக்குரிய கரம் பலகைகள் பரிவர்த்தனை தொடர்பான மற்றொரு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை...