நாட்டின் சில வலயங்களில் நாளை மற்றும் நாளை மறுதினமும் 3 மணி நேர மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை மின்சார சபை விடுத்த வேண்டுகோளுக்கமைய இவ்வாறு மின் விநியோகத் தடையினை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, A முதல் J வரையான வலயங்களிலும் P முதல் W வரையான வலயங்களிலும் நண்பகல் 12 மணி முதல் இரவு 10.30 வரையாக காலப்பகுதியில் 2 மணித்தியாலம் 30 நிமிடங்கள் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளத
அத்துடன், CC வலயங்களில் காலை 6 மணி முதல் 9 மணி வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்துயாலம் மின் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.
மேலும், M முதல் O வரையான வலயங்களிலும் X முதல் Z வரையான வலயங்களிலும் காலை 5 மணி முதல் 8.20 வரையான காலப்பகுதியில் 3 மணித்தியாலம் மின் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.