Date:

எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கணக்காய்வு

இலங்கை மத்திய வங்கியினால் கட்டணம் செலுத்தப்பட்ட இரண்டு எரிபொருள் கப்பல்கள் எதிர்வரும் 23 அல்லது 24 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் குறிப்பிட்டுள்ளது.

டீசல், பெட்ரோலுடனான இரண்டு கப்பல்களே நாட்டை வந்தடையவுள்ளன.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கணக்காய்வொன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதுமுள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் நியாயமாகவும் முறையாகவும் எரிபொருள் விநியோகிக்கப்படுவதில்லை என பல்வேறு தரப்பினரால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட சில நிலையங்களில் எரிபொருள் விநியோகத்தில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்று வருவதாக முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தினால் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விநியோகம் மாத்திரம் குறித்த ஆய்விற்கு உட்படுத்தப்படும் என தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் IOC நிறுவனத்தின் எரிபொருள் விநியோகமானது தேசிய கணக்காய்விற்கு உட்படுத்தப்பட மாட்டாதெனவும் அலுவலகம் கூறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் . 2025.08.14 பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 79வது ஆண்டு விழா இன்று இலங்கையில்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...