Date:

எரிபொருள் விநியோகத்திற்கு தடையாக வந்த காகம்

ஐந்து நாட்களுக்குப் பின்னர் இன்று (18) பிற்பகல் பண்டாரகம கூட்டுறவு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு ஒரு தொகை பெற்றோல் கிடைத்துள்ளது.

 

எரிபொருளைப் பெறுவதற்காக எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் நின்ற பெருமளவான மக்களுக்கு எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்ட போது அப்பகுதியில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

 

வெடிப்பு சம்பவத்துடன் அப்பகுதிக்காக மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

அருகில் இருந்த மின்மாற்றியில் காகம் ஒன்று மோதியதில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த வெடிப்பு சம்பவம் ஏற்பட்டது தெரியவந்தது.

 

பின்னர், மின்சார சபை அதிகாரிகள் வந்து பழுதை சரிசெய்து மின் விநியோகத்தை சீரமைத்தனர்.

 

அதன்படி சுமார் அரை மணி நேரம் எரிபொருள் விநியோகம் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரியந்த ஜெயக்கொடிக்கு பிணை

ஓய்வுபெற்ற முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்பிரியந்த ஜெயக்கொடிக்கு மஹர...

இந்தியாவை அடிக்க ஆரம்பித்து விட்டது அமெரிக்கா

சீனாவும், அமெரிக்காவும் பரம எதிரிகளாக உள்ளன. இதனால் சீனாவை சமாளிக்க அதன்...

நேற்று மற்றும் இஸ்ரேல் தாக்குதலில் 135 அப்பாவி பலஸ்தீனர்கள் உயிரிழப்பு

காசா முழுவதும் இஸ்ரேல் நேற்று தாக்குதல்களில் 135 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு. மேலும்...

அமெரிக்காவின் வரி விதிப்பு – இன்று முதல் அமுலுக்கு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கையின் கீழ் இலங்கை மீது...