நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி அத்தியாவசிய பராமரிப்பு பணிகளுக்காக இன்று (17) நள்ளிரவு முதல் மூடப்படவுள்ளது.
அதாவது 80 நாட்களுக்கு இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக மின்சார உற்பத்தி குறைந்தாலும் தற்போதைய மின்வெட்டு நேரம் அதிகரிக்கப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
வருடாந்தம் மேற்கொள்ளப்படும் அத்தியாவசிய பராமரிப்புக்காக நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதி இன்று நள்ளிரவு முதல் இவ்வாறு மூடப்படவுள்ளது.