Date:

மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கை தொடர்பாக 7 நாடுகளின் குழு கலந்துரையாடல்

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் மாநாட்டில் இலங்கை தொடர்பாக அமையப்பெற்ற 7 நாடுகளின் குழு கலந்துரையாடலில் மே மாதம் 9ஆம் திகதி இலங்கையில் நடந்த வன்முறைகள் தொடர்பான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 50ஆவது மாநாட்டில் இந்த குழுவின் சார்பாக அறிக்கை ஒன்றை வாசித்த, பிரித்தானியாவின் பிரதிநிதி ரிட்டா ஃப்ரென்ச், இலங்கை அண்மைக்காலமாக முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளை அறிந்திருப்பதாக தெரிவித்தார்.

அத்துடன் இலங்கையின் போராட்டங்கள், ஒன்று கூடல்கள் போன்றவற்றுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளமையும் வரவேற்கப்படுகிறது.

ஆனால் நாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி அமைதி போராட்டத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக விசாரணைநடத்தப்பட்டு, தொடர்புடையவர்கள் பொறுப்புக்கூறச் செய்யப்பட வேண்டும்.

அத்துடன் நீண்டகாலமாக இலங்கையில் நிலவுகின்ற தண்டனைகளில் இருந்து தப்புகின்ற நிலைமை மற்றும் ஊழல்கள் தொடர்பாகவும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

எரிபொருள் விலை அதிகரிப்பு: அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கம்

நாட்டில் எரிபொருள் கையிருப்பு உள்ளதாக அரசாங்கம் தெரிவித்த போதிலும், திடீரென எரிபொருள்...

யோஷிதவுக்கு அதிகுற்றப்பத்திரிகை கையளிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இளைய மகன் யோஷித ராஜபக்ச, தனியார்...

சி.ஐ.டியின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்க...

கொழும்பு மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின் தடை

கொழும்பு 9, 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக...