Date:

கூட்டிச் செல்வோரே காட்டிக் கொடுக்கும் கடல் வழி வெளிநாடு பயணம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையை தொடர்ந்து சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

அண்மைக் காலமாக இவ்வாறு வெளிநாடு செல்ல முயற்சித்த பலர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வெளிநாடுகளுக்கு செல்ல ஏற்பாடுகளை செய்து தருவதாக கூறி, கடத்தல்காரர்களினால் தங்களை தேடி வரும் ஒவ்வொருவரிடமிருந்தும் 700,000 ரூபா முதல் ஒரு மில்லியன் ரூபா வரை பணத்தை பெற்றுக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இவர்களை பாதுகாப்பாக அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு கூட்டிச் செல்வதாக கூறிக்கொண்டு படகுகளில் அவர்கள் ஏறியதும் கடத்தல்காரர்களே பாதுகாப்பு படையினருக்கு படகில் செல்பவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதாக தெரியவந்துள்ளது.

பணம் பறிக்கும் நோக்கில் திட்டமிட்டு செயற்படு ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி கும்பல்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடற்பரப்பில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால் அவ்வாறு இலகுவாக எவருக்கும் கடல்வழியாக செல்ல முடியாது என்றும், வீணாக கடத்தல் காரர்களை நம்பி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று மக்களை கேட்டுக்கொள்வதாகவும் இலங்கை பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் . 2025.08.14 பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 79வது ஆண்டு விழா இன்று இலங்கையில்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...