Date:

நுவரெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைதியின்மை

நாட்டில் தொடர்ந்து எரிபொருளுக்கான தட்டுப்பாடு காணப்படுகின்ற போதிலும் நுவரெலியா எரிபொருள் நிரப்பு நிலையத்தில் திடீரென மக்கள் கூடியமையால் இன்று (14) பதற்றமான சூழல் நிலவியது.

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அவசர சேவைகளுக்கு மாத்திரம் என வைக்கப்பட்டிருந்த பெட்ரோலினை எரிபொருள் நிலைய ஊழியர் ஒருவரின் உதவியுடன் தனியார் ஒருவருக்கு முச்சக்கர வண்டியினுல் கேன்களை வைத்து 15 ஆயிரம் ரூபாய் க்கு மேலாக பெற்ரோலினை வழங்கியமையால் வரிசையில் காத்திருந்து எரிபொருள் கிடைக்காதவர்கள் எரிபொருள் பெற முயன்ற போது, எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

இதன் போது எட்டு மணித்தியாலயம் வரிசையில் காத்திருந்த ஒருவர் இவ்வாறு தெரிவித்தார் – சாதாரண நேரங்களில் எரிபொருள் நிரப்ப சென்றால் எரிபொருள் இல்லை இல்லை என ஊழியர்கள் தெரிவிப்பதாகவும், நள்ளிரவு நேரங்களில் சில தனியார்களுக்கு அதிக விலையிலும் அதிக அளவிலும் எரிபொருட்களை வழங்குவதாகவும் கூறினார் .

இதன்போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த நுவரெலியா பொலிஸார் பொது மக்களுடன் கலந்துரையாடி மக்களை கலைந்து செல்லுமாறு எச்சரித்த நிலையில் அனைவரும் கலைந்து சென்றனர்.

செ.திவாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் புதிய பொலிஸ்மா அதிபராக சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா...

கம்பஹாவில் சில பகுதிகளில் நாளை 10 மணிநேர நீர்வெட்டு

திருத்தப்பணிகள் காரணமாக கம்பஹா மாவட்டத்தில் உள்ள சில பகுதிகளில் 10 மணிநேரம்...

நாணய மாற்று விகிதம்

இன்றைய (13.08.2025) நாணய மாற்று விகிதம்

40 கட்சிகளின் பதிவு விண்ணப்பங்களை நிராகரித்த தேர்தல்கள் ஆணைக்குழு

புதிய கட்சிகளை பதிவு செய்வதற்காக விண்ணப்பிக்கப்பட்ட 77 விண்ணப்பங்களுள் 40 விண்ணப்பங்கள்...