Date:

பாழடைந்த அறையிலிருந்து இரு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – ஊரெழு பகுதியிலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 11ஆம் திகதி ஊரெழுவில் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், காணாமற்போயிருந்த ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

ஊரெழு கிழக்கு பகுதியிலுள்ள பாழடைந்த அறையொன்றில் இருந்தே இவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலமாக மீட்கப்பட்டவர் இணுவில் பகுதியைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 36 வயதான ஒருவராவார்.

சம்பவ இடத்திற்கு சென்ற மரண விசாரணை அதிகாரி, சடலம் மீதான விசாரணைகளை முன்னெடுத்ததுடன் பிரேத பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பாகிஸ்தானின் 79வது சுதந்திர தினம்

ஏ.எஸ்.எம்.ஜாவித் . 2025.08.14 பாகிஸ்தானின் சுதந்திரத்தின் 79வது ஆண்டு விழா இன்று இலங்கையில்...

தாய்வானை உலுக்கிய ‘போடூல்’ புயல்

கிழக்கு சீனக்கடலில் உருவான போடூல் புயல் தாய்வானின் கரையைக் கடந்த நிலையில்...

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டம்

திருகோணமலையில் விவசாய நிலங்களை தனியார் நிறுவனங்களுக்கு பகிர்ந்தளிப்பதற்கும், அபிவிருத்தி திட்டங்களுக்காக வன...

BOC, ITN உட்பட பல அரச நிறுவனங்களுக்கு புதிய தவிசாளர்கள் நியமனம்

முக்கிய அரச நிறுவனங்களுக்கு நான்கு புதிய தலைவர்களை நியமிப்பது உட்பட பல...