வாழ்க்கைச் செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான ஹரினி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாதாந்தம் ரூபா 64,000 – ரூபா 70,000 வரை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதில் இறைச்சி, முட்டை அல்லது பால் உள்ளடங்கவில்லை எனவும், அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இந்தத் தொகை தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் மக்கள் தொகையில் தொழிலாளர் வர்க்கம் உட்பட 60-65 வீதமானோர் அத்தகைய வருமானத்தை ஈட்டவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போது வறுமையில் வாடும், வேலையின்மை மற்றும் வேலையில் இருப்பவர்கள் வாழ்க்கைச் செலவு மற்றும் பொருளாதார நெருக்கடியால் சமமாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.