நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் கிராமத்தில் நாளை(9) காலை சுனாமி ஒத்திகை இடம்பெற உள்ளதால் அயல் கிராம மக்கள் அச்சமடைய தேவையில்லை என நானாட்டான் பிரதேச செயலாளர் மா. ஸ்ரீஸ்கந்த குமார் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அச்சங்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம், அறுகுக்குன்று போன்ற கடற்கரையோர பிரதேசங்களில் சுனாமி ஒத்திகை நிகழ்வு நாளை(9) காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரையான காலப்பகுதிக்குள் நடைபெற உள்ளது.
சுனாமி ஒத்திகை
மன்னார் அச்சங்குளத்தில் நாளை சுனாமி ஒத்திகை: பொது மக்களுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்
எதிர் காலத்தில் சுனாமி சம்பந்தமான அனர்த்த நடவடிக்கைகளில் இருந்து மக்களை விழிப்பூட்டுவதற்கும் அது சம்பந்தமான அறிவை பெற்றுக் கொள்வதற்குமான ஒத்திகை நிகழ்வாகவே இது நடைபெற உள்ளது.
சுனாமி நடைபெறும் போது எவ்வாறு தற்காத்துக் கொள்வது போன்ற ஒத்திகை நிகழ்வு மாத்திரம் இடம்பெறவுள்ளது. இது ஒரு உண்மையான சம்பவம் அல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களிடம் வேண்டுகோள்
அயல் கிராமத்து மக்கள் ஒத்திகை குறித்து பதற்றமடைய தேவையில்லை என நானாட்டான் பிரதேச செயலாளர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.