Date:

சுகாதார பிரிவில் இருந்து பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

வீடுகளில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் மூலம் ஏற்படும் பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலை காரணமாக மருந்துகளுக்கு பாரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக செல்லப்பிராணிகள் மூலம் ஏற்படும் பாதிப்பை குறைத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான மருந்து விநியோகம் ஒகஸ்ட் மாதத்திற்கு பின்னரே சீராகும் என்றும் முக்கிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் அடுத்த இரண்டு மாதங்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இக்காலப்பகுதியில் அத்தியாவசிய மருந்துப் பொருட்களை மட்டுமே பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பஸ் கட்டணங்கள் தொடர்பில் வெளியான அறிவித்தல்!

ஆகஸ்ட் மாதத்திற்கான பஸ் கட்டணங்களில் எந்த மாற்றமும் இல்லை என தனியார்...

NÜWA ஹோட்டலை அறிமுகப்படுத்தும் City of Dreams Sri Lanka: அதிஉயர் ஆடம்பர விருந்தோம்பலின் புதிய சகாப்தம் ஆரம்பம்

இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் ஒரு முக்கிய மைக்கல்லாக, Melco...

அமெரிக்கா முன்வைத்த திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் கட்டமைப்பு வரி குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள JAAF

ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைப்படுத்தப்படும் அமெரிக்காவின் திருத்தப்பட்ட பரஸ்பர ஒத்துப்போகும் வரி...

மீளவும் C Rugby சுற்றுத்தொடர்! கோலாகலத்திற்கு நீங்கள் தயாரா?

சகோதர மற்றும் சகோதரிகள் பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும்...