Date:

செப்டெம்பருக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் – பிரதமர்

செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாம், நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva)வுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாடியபோது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விவாதித்ததாக குறிப்பிட்டார்.

இதன் போது பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அதிகாரிகள் மட்ட உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக, கூடிய விரைவில் இலங்கைக்கு பயணம் செய்யுமாறு,தாம் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

கொழும்பு இந்துக் கல்லூரியில் நடைபெற்ற “பவளப் பொங்கல் 2026”

இலங்கையின் முன்னணித் தமிழ் பாடசாலைகளில் ஒன்றான இந்துக் கல்லூரி கொழும்பு, தனது...

ஜொலிக்கப் போகும் ராகம நகரம்..!

ராகம நகரத்தை மையமாகக் கொண்டு பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஒன்றை...

அனுஷ பெல்பிட்ட கைது!

முன்னாள் அமைச்சின் செயலாளரும் பணிப்பாளர் நாயகமுமான அனுஷ பெல்பிட்ட, இலஞ்சம் மற்றும்...

ஜோன்ஸ்டன் உள்ளிட்ட ஐவருக்கு மீண்டும் விளக்கமறியல்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அவரது இரண்டு மகன்கள் உட்பட...