Date:

செப்டெம்பருக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி கிடைக்கும் – பிரதமர்

செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெற்றுக்கொடுக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தாம், நேற்று சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கிரிஸ்டலினா ஜோர்ஜிவா (Kristalina Georgieva)வுடன் தொலைபேசியில் தொடர்புக்கொண்டு உரையாடியபோது, நாட்டின் தற்போதைய பொருளாதார நிலைமை குறித்து விவாதித்ததாக குறிப்பிட்டார்.

இதன் போது பொருளாதார நெருக்கடியைத் தீர்ப்பதற்கு இலங்கை அரசாங்கம் இதுவரை எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.

அதிகாரிகள் மட்ட உடன்படிக்கையை இறுதி செய்வதற்காக, கூடிய விரைவில் இலங்கைக்கு பயணம் செய்யுமாறு,தாம் சர்வதேச நாணய நிதியத்தின் குழுவுக்கு அழைப்பு விடுத்ததாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.

இந்நிலையில் கடினமான காலங்களில் இலங்கைக்கு உதவ சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அந்தமான் நிகோபார் தீவுகளில் நிலநடுக்கம் இலங்கையின் நிலைமை என்ன?

அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே இன்று (29) அதிகாலை ஏற்பட்ட...

பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள்...

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...