Date:

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேன்முறையீடு!

ஒத்திவைக்கப்பட்ட கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, தமது தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்துள்ளார்.

இந்த மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு, பிரசன்ன ரணதுங்க தனது சட்டத்தரணிகள் ஊடாக கொழும்பு மேல் நீதிமன்றில் கையளித்துள்ளார்.

வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்தி 25 மில்லியன் ரூபா பெறுமதியான உறுதிமொழி பத்திரங்களை பலவந்தமாக பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழிய சிறைத் தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் நேற்று (6) தீர்ப்பளித்தது.

வர்த்தகர் ஒருவரிடம் 64 மில்லியன் ரூபாவை கப்பமாகக் கோரி அச்சுறுத்தியதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, அவரது மனைவி மற்றும் மற்றுமொரு நபர் என மூவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

நிலந்தவின் பணிநீக்கம் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான ஒழுக்காற்று...

இஸ்ரேல் சபாத் இல்லத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத்...

கடந்த ஆறு மாதத்தில் அரச வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம்

2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின்...

மஹிந்தானந்த அளுத்கமகே உள்ளிட்டோருக்குப் பிணை

சர்ச்சைக்குரிய கரம் பலகைகள் பரிவர்த்தனை தொடர்பான மற்றொரு வழக்கு தொடர்பாக குற்றப்பத்திரிகை...