Date:

விறகு தேடச் சென்ற இரு யுவதிகள் மாயம்

விறகு தேடச் சென்ற இரண்டு யுவதிகளை கடந்த 06 நாட்களாக காணவில்லை என அக்கரபத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் அக்கரப்பத்தனை சென்மார்கட் தோட்டத்தில் வசிக்கும் சிவக்குமார் ரூபிகா வயது 15, சிவலிங்கம் ஸ்ரீதேவி வயது 18 ஆகிய இரண்டு யுவதிகள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 2ஆம் திகதி காலை 11 மணியளவில் வீட்டில் இருந்து விறகு சேர்க்க சென்றவர்கள் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும், இதுவரை இவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனர்.

இவர்களின் தாய், தந்தையர்கள் மற்றும் உறவினர்கள் கொழும்பு உட்பட சகல இடங்களிலும் தேடிய போதிலும், இதுவரை கிடைக்கவில்லை. அக்கரப்பத்தனை பொலிஸ் அதிகாரிகள் தொடர்ந்து தேடும் பணியில் ‌ ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த யுவதிகள் தொடர்பான தகவல்கள் இதுவரை கிடைக்காத காரணத்தினால் தோட்டத்தில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து வேலைக்கு செல்லாமல் இருக்கின்றனர். அத்தோடு, குறித்த 2 யுவதிகளும் தோட்டத்தில் தொழிலாளியாக தொழில் செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் 30 நிமிடங்கள் நீட்டிப்பு

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் முப்பது நிமிடங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக...

நிலந்தவின் பணிநீக்கம் குறித்து கத்தோலிக்க திருச்சபையின் நிலைப்பாடு

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கு எதிரான ஒழுக்காற்று...

இஸ்ரேல் சபாத் இல்லத்தை அகற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள இஸ்ரேல் நாட்டவர்களால் முன்னெடுத்துச் செல்லப்படும் சபாத்...

கடந்த ஆறு மாதத்தில் அரச வருமானத்தில் ஏற்பட்ட மாற்றம்

2025 ஜனவரி முதல் மே வரையிலான 5 மாத காலப்பகுதியில் அரசாங்கத்தின்...