Date:

யாழில் 120 கிலோ கஞ்சா விசேட அதிரடிப்படையினரால் மீட்பு

கிளிநொச்சி – விவேகானந்தா நகர் பகுதியில் நேற்று பிற்பகல் 190 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது குறித்த கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

மன்னார் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த பகுதியில் வாடகைக்கு வீடு பெற்று வசித்து வந்துள்ளதாகவும், வியாபார நோக்கத்திற்காக என தெரிவித்து மன்னாரிலிருந்து அங்கு வந்து தங்கியுள்ளதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

மீட்கப்பட்ட கஞ்சா சுமார் 190 கிலோகிராம் எடையுடையது எனவும், அதன் இலங்கை பெறுமதி சுமார் 5 கோடி ரூபா என கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் விசேட அதிரடிப்படையினர் சந்தேகநபரையும், கஞ்சா பொதியையும், இதற்காக பயன்படுத்தப்பட்ட சொகுசு காரினையும் கிளிநொச்சி பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கைக்குட்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியுடன் கைது

மினுவாங்கொடை வைத்தியசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் இருந்து T - 56...

இலங்கை மாணவர்களுக்கு சீனாவின் புலமைப்பரிசில்

2025/2026 ஆம் கல்வியாண்டிற்கான முதுகலை மற்றும் முனைவர் பட்டங்களுக்காக, 30 இலங்கை...

அனுர- மோடியால் பெரும் பதற்றம்

"அனுர மோடியின் மோசடி ஒப்பந்தங்களை கிழித்தெறியுங்கள், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF)...

“வெள்ளைக்கார பெண்களுக்கு பிரேமதாச உள்ளாடை தைக்கிறார்”

ரணசிங்க பிரேமதாச 200 ஆடைத் தொழிற்சாலை திட்டத்தை முன்னெடுத்த போது, பிரேமதாச...