பண்டாரகம – அட்டுலுகம பகுதியில் 9 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றப்புலனாய்வு பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் நிஹல் தல்துவ இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
இதேவேளை, கண்டெடுக்கப்பட்ட 9 வயது சிறுமியின் சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று முன்னெடுக்கப்படவுள்ளது.