Date:

அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான சுற்றறிக்கை வெளியானது

அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கான செயற்றிட்டமொன்றை நாளை முதல் நடைமுறைப்படுத்துமாறு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் MMPK மாயாதுன்னே இதற்கான சுற்றறிக்கையை இன்று அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இதற்கமைய அரசாங்க அலுவலகங்களினால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் தடையின்றி முன்னெடுப்பதை உறுதி செய்யும் வகையில் அத்தியாவசிய ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மறு அறிவித்தல் வரை அத்தியாவசியமாக தேவைப்படும் குறைந்த பட்ச ஊழியர்களை மாத்திரம் சேவைக்கு அழைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், அரச செலவினங்களை முகாமைத்துவம் செய்வதற்காக கடந்த மார்ச் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை தொடர்பில் கவனம் செலுத்துமாறும் பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அரச நிறுவனங்களின் பிரதானிகளுக்கு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், குறித்த நடைமுறை அத்தியாவசியமான அரச சேவைகளை முன்னெடுப்பதற்கு தடையாக அமையக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

சவுதி வழங்கிய நிபந்தனையற்ற, ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று ...

ரம்புட்டான், மங்குஸ்தான் உட்கொள்ளும் மக்களிடம் விசேட கோரிக்கை

ரம்புட்டான், மங்குஸ்தான் போன்ற பழங்களின் தோல்களை முறையாக அப்புறப்படுத்தாவிட்டால் டெங்கு பெருகும்...

மஹர பள்ளிவாசலுக்கு பிரதி அமைச்சர் முனீர் முழப்பர் கண்காணிப்பு விஜயம் (clicks))

முஸ்லிம் சிறைச்சாலை அதிகாரிகளின் மத அனுஸ்டானங்களுக்காக நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி...

கொழும்பு மேயரின் நடனம்,சமூக ஊடகங்களில் வைரல்

ஒரு பொது விழாவில் பாரம்பரிய ஜப்பானிய நடனத்தில் கொழும்பு மேயர் வ்ரே...