Date:

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு 24 மணித்தியால பொலிஸ் பாதுகாப்பினை வழங்குமாறும், நடமாடும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுத்து பொலிஸ் மா அதிபரினால் விசேட சுற்று நிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் எரிபொருளை பெறுவதற்கு வேறு வழிகளை பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில்,  இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசைகளில் காத்திருக்கும் மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யுமாறும், இடையூறு விளைவிக்கும் அவசியமற்ற நபர்களை வெளியேற்றுமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களில் உள்ள எரிபொருள் கொள்கலன்களுக்கு பாதுகாப்பினை வழங்குவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ சுட்டிக்காட்டியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

அனுர செய்தது சரி: மஹிந்த

முன்னாள் ஜனாதிபதிகளின் உரித்துரிமைகள் நீக்குதல் சட்டத்தின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...

யார் இந்த சார்லி கிர்க்?

அமெரிக்காவின் உடா பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர்களுடனான கேள்வி பதில் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த...

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் சந்திரிக்கா!

முன்னாள் ஜனாதிபதிகளின் வரப்பிரசாதங்களை ரத்து செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து முன்னாள்...

நாவலப்பிட்டி அல் – ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு முதற்கட்ட நிதி ஒதுக்கீடு.

நாவலப்பிட்டி அல் - ஸபா ஆரம்ப பாடசாலை நிர்மாணத்திற்கு ரவூப் ஹக்கீமின் தொடர்...