எரிபொருள் விலைகள் இன்று நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
அந்தவகையில், ஒக்டென் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 420 ரூபாவாக அதிகரிக்கப்படவுள்ளதாகவும் ஒக்டென் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 450 ரூபாவாக அதிகரிப்படவுள்ளதோடு, ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றின் புதிய விற்பனை விலை 400 ரூபாவாகவும் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விற்பனை விலை 445 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.