Date:

21வது திருத்தம் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கட்டுப்பாடற்ற அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அரசியலமைப்பின் 21வது திருத்தம் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

 

நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த யோசனையை முன்வைத்ததாக அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்தார்.

 

“அமைச்சரவை அமைச்சர்கள் இப்போது கட்சித் தலைவர்களுக்கு முன்மொழிவை பரிந்துரைத்துள்ளனர். இது அடுத்த வாரம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்படும்” என்று அமைச்சர் மேலும் கூறினார்.

 

21வது திருத்தம், ஜனாதிபதிக்கு எதிராக பாராளுமன்றத்தை பலப்படுத்திய 19வது திருத்தத்தை இரத்து செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கட்டுப்பாடற்ற அதிகாரங்களை வழங்கிய 20வது திருத்தத்தை ரத்து செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தற்போதுள்ள ஆணைக்குழுக்களின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதற்கும் அவற்றை சுயாதீனமாக்குவதற்கும் முயற்சிக்கிறது.

 

இந்த பிரேரணை பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டால் இரட்டைக் குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்க தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என மூத்த அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breaking புதுடெல்லியில் குண்டுவெடிப்பு: பாரிய சேதம்

இந்தியா தலைநகர் புதுடெல்லியில் செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது...

பல கோடி பெறுமதியான வாசனைத் திரவியங்கள் மீட்பு

சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட சுமார் 10 கோடி ரூபாய் பெறுமதியான...

ஒரே நாளில் 1,000 இற்கும் அதிகமான சுற்றிவளைப்புக்கள்; 1,284 பேர் கைது

விஷப் போதைப்பொருட்களை நாட்டிலிருந்து அகற்றும் 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின்...

இரட்டை கொலைத் தொடர்பில் 6 பேருக்கு மரண தண்டனை

அம்பாறை மேல் நீதிமன்றம் இன்று (10) 6 பேருக்கு எதிராக மரண...