மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்றுவந்த ஆண் ஒருவர் வைத்தியசாலை விடுதி மலசல கூட ஜன்னல் கம்பியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நேற்றிரவு (22) இரவு இடம்பெற்றுள்ளது.
வவுணதீவு நாவற்காடு பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய சிவலிங்கம் தட்சணாமூர்த்தி என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டார்.இது தொடர்பில் தெரியவருவதாவது,
தற்கொலை செய்துகொண்டவர் ஒரு மனநோயாளி எனவும். சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்றிரவு (22) விடுதியில் உள்ள நோயாளிகளை வைத்தியர் பார்வையிட்டு சென்றதன் பின்னர் குறித்த நபர் மலசலம் கழிப்பதற்காக சென்றுள்ளார்.
பின்னர் நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததையடுத்து அவருக்கு உதவியாக இருந்த உறவினர் கதவை திறந்தபோது மலசல கூட ஜன்னல் கம்பியில் அணிந்திருந்த சாரத்தை பயன்படுத்தி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து நீதிமன்ற உத்தரவை பெற்று சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுவருவதாகவும், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.