Date:

இனி எரிவாயு பெற்றுக்கொள்ள புதிய செயலி

லிட்ரோ எரிவாயு நிறுவனம் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் எரிவாயு விநியோகம் தொடர்பான சகல தகவல்களையும் வழங்குவதற்காக  புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக  லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

லிட்ரோ எரிவாயு விநியோகம்  மற்றும் எரிவாயு கிடைக்கும் இடங்கள் குறித்து  நுகர்வோர் மற்றும் முகவர்களுக்கு தகவல்கள் வழங்கும் வகையில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் மொபைல் செயலி அறிமுகப்படுத்த உள்ளது. இந்த செயலியை எதிர்வரும் திங்கட்கிழமை தொடக்கம்  அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, கையடக்கத்தொலைபேசி மூலம் நுகர்வோர்,  முகவர்கள் மற்றும் துணைமுகவர்கள் தகவலைப் பெற முடியும். வரிசையில் நிற்பதற்கு முன் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வழங்கப்படும் எரிவாயு சிலிண்டர்களின் திகதி மற்றும் எண்ணிக்கைகள் குறித்து அந்த பகுதி முகவர்களிடம் கேட்டு தகவல்களை தெரிந்து கொள்வதற்கு முடியும்என்றும் நிறுவனத்தின்  தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர் குடும்பத்துடன் தற்கொலை

யடிநுவர பிரதேச சபையின் எதிர்க்கட்சித் தலைவர், அவரது மனைவி மற்றும் மகள்...

(Clicks) அநுரவுக்கு மாலைதீவில் அமோக வரவேற்பு!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்தை ஆரம்பித்து, இன்று (28)...

பாடசாலை மாணவர்களுக்கு இரண்டுவேளை இடைவேளை

புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்கள்...

பொரளை விபத்து – கைதான சாரதி தொடர்பில் அதிர்ச்சி தகவல்

பொரளை மயான சந்தியில் இன்று (28) காலை ஏற்பட்ட விபத்து தொடர்பாக...