அத்தியாவசியமற்ற அரச சேவையாளர்கள் நாளைய தினம் பணிக்கு சமூகமளிக்காதிருப்பது குறித்து பரிசீலனை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க பரிந்துரைத்தார்.
நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு பரிந்துரையொன்றை முன்வைத்தார்.
எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த தீர்மானத்தினை பரிசீலனை செய்யுமாறு பிரதமர் இதன்போது வலியுறுத்தினார்.