Date:

பேக்கரி உற்பத்திகள் முழுமையாக நிறுத்தப்படுவதற்கான சாத்தியம்?

மூலப்பொருட்கள் பற்றாக்குறை காரணமாக  எதிர்வரும் நாட்களில் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர்
என்.கே. ஜயவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்

இதேவேளை கோதுமை மா மற்றும் எரிபொருள்  பற்றாக்குறை  காரணமாக பேக்கரி தொழிலை முன்னெடுப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

அத்துடன் குறித்த பிரச்சினைக்கு   அரசாங்கம்  உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்காவிட்டால்  எதிர்வரும் நாட்களில் பேக்கரி உற்பத்தி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்படும் நிலை  காணப்படுவதாகவும் என  அகில  தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம்   பிறிமா நிறுவனம்   ஒரு கிலோகிராம்  கோதுமை மாவின் விலையினை  40 ரூபாவினாலும் செரண்டிப் நிறுவனம் 35  ரூபாவினாலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

உத்தியோகபூர்வ இல்லத்தைவிட்டு வெளியேறினார் மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்போது விஜயரமாவில் உள்ள தனது உத்தியோகபூர்வ...

பிரான்ஸில் பாரிய போராட்டம்: 200 பேர் கைது

பி​ரான்ஸில் நடை​பெற்று வரும் போராட்​டங்​கள் தொடர்​பாக 200 பேரை பொலி​ஸார் கைது...

ரயில் தடம் புரண்டது

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிக்கே ரயில்,...

பாராளுமன்றத்தில் பரபரப்பான சூழ்நிலை:10 நிமிடங்கள் ஒத்திவைப்பு

பாராளுமன்றத்தில் ஏற்பட்ட பரபரப்பான சூழ்நிலை காரணமாக, சபாநாயகர் பாராளுமன்ற நடவடிக்கைகளை 10...