ஜோன் கொத்தலாவ பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கட்டிடத்திலிருந்து விழுந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை 10.15 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திலுள்ள கட்டிடத்தின் ஆறாவது மாடியிலிருந்து பெண் கீழே விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேற்படி உயிரிழந்த பெண் பாணந்துறையில் வசிக்கும் 31 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
இறந்தவரின் சடலம் களுபோவில கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையின் பிரேத
அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.