Date:

நாடாளுமன்றத்தின் புதிய பிரதி சபாநாயகர் தெரிவு

நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ சற்று முன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற பிரதி சபாநாயகர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன மற்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஸ ஆகியோர் முன்மொழியப்பட்டனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரத்ன 78 வாக்குகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் ராஜபக்ஸ 109 வாக்குகளையும் பெற்றுக் கொண்டமைக்கு அமைய நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக  அஜித் ராஜபக்ஸ  சற்று முன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வாக்கெடுப்பில் இருந்து விலகி செயற்பட தீர்மானித்துள்ளதாக சுயாதீனமாக செயற்படும் கட்சிகளின் சார்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச அறிவித்தார்.

அத்துடன், வாக்கெடுப்பின் போது எந்தவொரு தரப்பினருக்கும் வாக்களிக்காமல் செயற்பட தீர்மானித்துள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிதி மைத்திரிபால சிறிசேன அறிவித்தார்.

இந்த நிலையில் வாக்களிக்காதிருக்க தீர்மானிக்கப்பட்ட தரப்பில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது வாக்குகளை செலுத்தியிருந்தனர்.

அத்துடன், முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ, முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம ஆகியோர் நாடாளுமன்றத்துக்கு வருகை தரவில்லை.

இதற்கமைய நாடாளுமன்ற பிரதி சபாநாயகராக அஜித் ராஜபக்ஸ  சற்று முன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Popular

More like this
Related

Breking நிலந்த ஜயவர்தன, பொலிஸ் சேவையிலிருந்து நீக்கம்

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்...

(Clicks) அமைச்சர் விஜித ஹேரத் – பிரபல நடிகர் ரவி மோகன் சந்திப்பு

பிரபல நடிகரும் தயாரிப்பாளருமான ரவி மோகன், பாடகி கெனீஷா பிரான்சிஸ் மற்றும்...

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பியின் மகன் அதிரடி கைது

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகேவின் மகன் கைது...

மலையகத்தில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சடுதியாக அதிகரிப்பு

மலையகத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில்...